Posts

பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் ஆலயம் | Sri Pasupatheeshwarar Temple |Devara Sthalam | Pandanallur

Image
பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் ஆலயம் | கும்பகோண வட்டார கோயில்கள் | Sri Pasupatheeshwarar Temple | Pandanallur அன்றைய நாளின் தொடர்ச்சியாக குத்தாலம் சென்றுவிட்டு நாங்கள் சென்ற அடுத்த கோயில் பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் ஆலயம். (03.11.2025) கோயிலில் திருப்பணிகள் நடந்து கொண்டு இருந்தது , கோயிலை சென்று பார்த்தபோது மிகவும் மனவேதனை அடைந்தது . கற்றளியில்  உள்ள தூண்கள் அவை முதலாம் பராந்தகன் காலகட்டத்தை சேர்ந்தவை என்று அடையாளம் காட்டின அனால் கோயில் முற்றிலும் கட்டுமானங்கள் என்ற பெயரில் சிதைக்கப்பட்டுவிட்டது. சட்டநாதருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுஉள்ளது இது மிகுந்த வருத்தம் அளிக்கும் விடயம் , கோயில் விமானத்தில் இருக்கும் சட்டநாதருக்கு எந்த காரணத்திற்காக தனி சன்னதி அமைக்க வேண்டும் ? கோயிலை கட்டியவர்கள் அதனை அமைக்காதபோது நீங்கள் ஏன் மீள் கட்டுமான செய்து மைக்கிறீர்கள்  ? இது கோயிலில் கட்டுமானத்தை அதன் பழமையை சிதைக்கும் விடயம் என்று உங்களுக்கு தோன்றவில்லையா ? கோயில் முழுவதும் வர்ணங்கள் ? ஏன் ? எதற்கு ?  கோயில் கற்றளி ! முழுக்க கற்களை கொண்டு செய்யப்பட்டது ! ஏன்  அவைகளுக்கு வர்ணம் பூசி அதன் உண்...

குத்தாலம் ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சுவாமி திருக்கோயில் | Kuthalam | Sri Uktha Vedheeshwara

Image
 குத்தாலம் ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சுவாமி திருக்கோயில் | Kuthalam | Sri Uktha Vedheeshwarar Temple | Devara Sthalam - 10th CE Temples கும்பகோணம் - மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது குத்தாலம் என்னும் ஊர். கல்வெட்டுகளில் இதன் பழைய பெயர் திருத்துருத்தி. இவூரில் உள்ள உக்தவேதீஸ்வரர் கோயில்  திருஞான சம்பந்தர் , சுந்தரர், மாணிக்கவாசகர் பாடல் பெற்ற தலம். கோயில் வரலாற்றை கொஞ்சம் பாப்போம், நவம்பர் 3 நானும் , ராஜவேல் அண்ணணும் சென்று இருந்தோம் , ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் ஒன்றாக பயணிக்கும் முதல் கற்றளி. கோயிலின் வரலாறு  கோயில் கட்டுமானம் திருத்தப்பட்டதால் அதன் காலத்தை அறிந்து  கொள்ள முடியவில்லை எனினும்  முதலாம் ராஜராஜர், முதலாம் ராஜேந்திரன் , குலோத்துங்கன், விக்கிரம சோழர் கால கல்வட்டுகள் உள்ளன.  தற்போது குத்தாலம் என வழங்கப்படும்  இவ்வூர் திருவழுந்தூர் நாட்டு திருத்துருத்தி என்று கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.  இரண்டாம் ராஜேந்திரரின் ஐந்தாம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு , கங்கைகொண்ட சோழபுரத்து பெரிய அங்காடி வியாபாரி வெண்காடன் ஆடவல்லான் தானம் கொடுத்த செய்தியை கூறுகிறத...
Image
 In the Journy of Searching  Adithya Chola முதலாம் ஆதித்தன் பள்ளிப்படை   ஆந்திர மாநிலம் , ஸ்ரீகாளஹஸ்தி அருகில் உள்ள தொண்டமானாடு என்னும் ஊரில் உள்ள கோதண்டராமசாமி எனும் ஆதித்தன் பள்ளிப்படை கோயில் இன்றும் ஒரு ராஜ்யத்தின்  வரலாற்றை தாங்கி நிற்கிறது. பள்ளிப்படைகள் இறந்த மன்னன் அல்லது அரசியாரின் நினைவாக அவர்கள் அஸ்தி மீது கட்டப்படும்.  வரலாறு என்பது வெறும் மன்னர்களும் , போர்களும் ரத்தகங்களும் தோய்ந்த கதையா? அது ஒரு சமூகத்தின் பரிணாமம் , ஒரு சமூகம் எப்படி வளர்ந்தது என்பதை காட்டும் கண்ணாடி.  ஒரு கனவையும் , காதலையும் கூட வரலாறு சுமந்து இருக்கிறது  தந்தை , சகோதரி வீழ்த்தி ஆட்சிக்கு வந்த கதைகளை கேட்டு இருப்பீர்கள் அனால் தந்தையின் மீது ஒரு மகன் கொண்ட பாசம், அவருடைய கனவை தான் சுமக்கும் பொறுப்பு , பெரும் இலக்கு , பெரும் கனவு இதை நீங்கள் கண்டதுண்டா ?  ஒரு தந்தை இறந்த செய்தி மகனுக்கு எதனை துன்பத்தை கொடுத்து இருக்கும், தன தந்தையின் நினைவை போற்றி பாதுகாக்க அவன் என்ன செய்வான். தந்தையின் கனவை, நினைவை போற்றுவதுதானே ஒரு மகனின் கடமை  ஆம் இறந்தவர் ஆதித்த சோழர், .பல...